Wednesday, December 29, 2010

Hapyy new year image 2011
















by

My best wishes for you HAPPY NEW YEAR 2011

R.GNANAKUMARAN





New Year  Wishes:
This is last evening of 2010
Last sun of 2010
Has spread its shine
On earth,
Feel remaining
Moments of last day,
Scatter happiness
Best of luck for 2011.
I wish U to have a
Sweetest Sunday,
Marvelous Monday,
Tasty Tuesday,
Wonderful Wednesday,
Thankful Thursday,
Friendly Friday,
Successful Saturday.
Have a great Year.
HAPPY NEW YEAR.
When the mid-nite bell rings tonight..
Let it signify new and better things for you,
let it signify a realisation of all things you wish for,
Let it signify a year of courage and believes,
Wishing you a Happy New Year 2011.
Year’s end is neither an end
nor a beginning
but a going on,
with all the wisdom
that experience
can instill in us.
New Year is the time to
unfold new horizons & realize new dreams,
to rediscover the strength & faith within u,
to rejoice in simple pleasures &
gear up 4 a new challenges.
Happy New Year 2011.          

by

rgnanakumaran 


Sunday, December 19, 2010

wireless mesh network

http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6VRG-4F53V5H-2&_user=10&_coverDate=03%2F15%2F2005&_rdoc=1&_fmt=high&_orig=search&_origin=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=1584153703&_rerunOrigin=google&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=7111e202312e81604cd5b74f80626675&searchtype=a

Monday, December 6, 2010

கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

07-12-2010
புதுடில்லி: மாணவர்களைக் கவருவதற்காக, உண்மைக்குப் புறம்பாக விளம்பரங்களை வெளியிடும் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கல்வி அல்லது பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் அறிவிக்கும் விளம்பரங்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும், எவை இடம் பெறக்கூடாது என்பது வழிகாட்டுதல்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உண்மைக்கு மாறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களைப் பார்த்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகள், பல்கலைகள், கல்லூரிகள், பள்ளிகள், சிறப்பு பயிற்சி நிலையங்களுக்கு பொருந்தும். இந்த அமைப்பு, தேசிய அளவில் உறுப்பு வகிக்கும் விளம்பர நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

விதிமுறைகள்:

கல்வி நிறுவனம் வழங்கும் படிப்பு அங்கீகாரம், தர நிர்ணயம் பெற்றதற்கான மற்றும் சட்டப்பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் விளம்பரம் செய்யக்கூடாது. கல்வி நிறுவனம் வழங்கும் குறிப்பிட்ட பட்டம், டிப்ளமோ அல்லது சான்றிதழ் போன்றவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தால், அந்த சட்டப்பூர்வ அமைப்பை பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விளம்பரம் செய்யும் நிறுவனம் அங்கீகாரம் பெறாமல், அந்நிறுவனம் இன்னொரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் பற்றி விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும், அந்நிறுவனத்தின் எழுத்துரு அளவானது, விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் எழுத்துரு அளவில் 50 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.  வானொலி அல்லது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வதாக இருந்தாலும், இணைப்பு நிறுவனத்தின் பெயரை அவசியம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற வகையில் வெளியாகும் விளம்பரங்களில், அதற்கான தகுந்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டும்.

பதவி உயர்வு, நிரந்த வேலை என்று வாக்குறுதி அளித்தால் அதற்கான ஆதாரங்களை அவ்விளம்பரத்தில் சேர்த்தே வெளியிட வேண்டும்.

கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள், அவர்கள் மதிப்பெண்கள், புகழ் பெற்ற நிறுவனங்களில் பெற்ற வாய்ப்பு, அவர்கள் பெறும் சம்பளம் ஆகியவற்றை வெளியிட விரும்பினால், விளம்பரத்தில் குறிப்பிட வேண்டியவை: படித்து வெளியேறிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விவரம், நிறுவன பாடத்திட்டத்தின் தர நிலை, அந்நிறுவனத்தின் ஆசிரியர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகுதிகள், வெளிநாட்டு நிறுவனங்களுடனான இணைப்பு, கல்வி நிறுவன உள்கட்டமைப்பு போன்ற விவரங்களை, சமீபத்திய ஆண்டுகளின் விவரங்கள்.

விளம்பரத்தில் குறிப்பிடப்படும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர், அந்த கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்திலிருந்து படித்து வெளியேறி நல்ல பணியில் இருக்கும் மாணவர்களை பற்றி விளம்பரத்தில் குறிப்பிடும் போது, படித்து தேறி வெளியேறிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட வேண்டும்.

கல்வி நிறுவனம் பெற்ற சிறந்த தரநிலை மற்றும் அதன் பாடத்திட்டத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடும் போது, அந்த சிறப்பு வெளியிடப்பட்ட தேதி மற்றும் தர நிர்ணய நிறுவனத்தின் முழுப்பெயர் தெரிவிக்க வேண்டும்.

விளம்பரத்தில் காட்டப்படும் கல்வி நிறுவனத்தின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பானது, உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் சிதைவுறாமலும் இருக்க வேண்டும்.

Sunday, December 5, 2010

தியானம் செய்வது எப்படி ? - வைரம் ராஜகோபால்

Add caption
தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக் கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும்.  தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வர். ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். அமர்ந்த மான் தோல், புள்ளி இல்லாத மான் தோலாக இருக்க வேண்டும்.  மான் தானாக இறந்திருக்க வேண்டும். அதனுடைய தோல் தான் ஜெபத்துக்கு உகந்தது; வேட்டையில் கொல்லப்பட்ட மான் தோல், ஜெபத்துக்கு உதவாது. புள்ளி இல்லாத மான் தோலை, கிருஷ்ணாஜனம் என்பர். இதுதான் உகந்தது. ஜெபம் செய்ய நதிக்கரை, தேவாலயம், புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. ஜெபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரைக் கொட்டை மாலை, பவழம் போன்ற மாலைகளும், பவுன், முத்து மாலைகளும் உபயோகிக்கலாம்.  முக்கியமாக, மனம் பகவானிடம் இருக்க வேண்டும். சும்மா ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டு, திண்ணையில் உட்கார்ந்தபடி தெருவில் போவோர், வருவோரை எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. ஜெபம் செய்வது என்றால், இத்தனை விஷயங்களை கவனிக்க வேண்டும். முடியுமா? முயன்று பாருங்கள்!
***
நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?
மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.
***

Friday, December 3, 2010

tamil

Common basic Tamil phrases useful for travel




Congratulations!

Paaraattukkal! or vazhtthukkal! பாராட்டுக்கள் / வாழ்த்துக்கள்!



Happy birthday!

Iniya Pirandha naal vazhtthukkal! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



Merry Christmas!

Iniya kiristhumas vazhtthukkal! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!



Happy new year!

Iniya putthaandu vazhtthukkal! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Happy Tamil new year!

Iniya putthaandu vazhtthukkal! இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Happy Chinese year!

Iniya putthaandu vazhtthukkal! இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Hello!

Alo! ஹலோ!



Good morning! / Good evening! / Good night!

Vanakkam! வணக்கம்!



How are you?

Eppati irukkinga? / Nalamaa? எப்படி இருக்கீங்க? / நலமா?



I'm fine, thanks!

Nallaa irukéan, Nandri! நல்லா இருக்கேன், நன்றி!



Thank you(very much)!

(Romba) Nandri! (ரொம்ப) நன்றி!



You're welcome!

Paravaa illa! பரவா இல்ல!



Good bye!

Poittu varén! போய்ட்டு வாரேன்!



See you later!

Apram paarkalam! அப்ரம் பார்க்கலாம்!



Mr.../ Mrs.…/ Miss…

Thiru…. / Thirumadhi…. / Selvi….. திரு / திருமதி / செல்வி



Nice to meet you!

Ungalai santhithathil magizhchi! உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!



Unga péru enna?

உங்க பேரு என்ன?



My name is ...

En péru ... என் பேரு ...



Where are you from?

Nienga engirundhu varrienga? நீங்க எங்கிருந்து வரீங்க?



I'm from ...

Naan ... irundhu varéan. நான் ... இருந்து வாரேன்.



Where do you live?

Neinga engéa vasikkirienga? நீங்க வசிக்கிறீங்க?



I live in ...

Naan ...il vasikkiréan. நான் ...ல் வசிக்கிறேன்.



How old are you?

Ungalukku ethanai vayasu? உங்களுக்கு எத்தனை வயசு?



I'm ... years old.

Enakku ... vayasu. எனக்கு ... வயசு.



Do you speak English?

Nienga English pésuviengala? நீங்க இங்க்லீஷ் பேசுவீங்களா?



I like Tamil .

Enakku Thamizh pidikkum. எனக்குத் தமிழ் பிடிக்கும்.



I have to go.

Naan poganum. நான் போகணும்.



Excuse me!

Mannikanum (or) Alo! மன்னிக்கணும் / ஹலோ!



One moment please!

Oru nimidam! ஒரு நிமிஷம்!



Can you help me?

Enakku oru udhavi seyya mudiyumaa? எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?



I'm lost.

Enakku vazhi theriyala. எனக்கு வழி தெரியலே.



Come with me!

Ennodu Vaanga! என்னோடு வாங்க!



I Don't Know!

Enakku theriyaathu. எனக்குத் தெரியாது.



I Don't Understand!

Enakku puriyala! எனக்குப் புரியலே.



Sorry

Mannikkanum! மன்னிக்கவும்.



No Problem!

Onnum prachanai illai. ஒன்னும் ப்ரச்சினை இல்லை.



Don't worry!

Kavalai padaatheinka! கவலைப்படாதீங்க!



I love you!

Naan unnai virumpukirén. நான் உன்னை விரும்புகிறேன்!



Do you like it?

unkalukku idhu pidikkuthaa? உனக்கு இது பிடிக்குதா?



I really like it!

Enakku idhu romba pidikkuthu. எனக்கு இது ரொம்பப் பிடிக்குது.



What Is This?

Idhu enna? இது என்ன?



How much is this?

Idhu evvalavu? இது எவ்வளவு?



Today/ Now / Tomorrow / Yesterday

Indru / Ippo / Naalai / Nétru இன்று / இப்போ / நாளை / நேற்று



In The Morning / In The Evening / At Night.

Kalaiyil / Maalaiyil / Rathri காலையில் / மாலையில் / ராத்ரியில்



What time is it?

Ippo mani enna? இப்போ மணி என்ன?



I

Naan நான்



He

Avan, Avar (with respect) அவன், அவர்



She

Aval அவள்



You

Nee, Neenga (with respect) நீ, நீங்க



They

Avanga அவங்க



It

Adhu அது



This

Idhu இது



That

Adhu அது



Father

Appa அப்பா



Mother

Amma அம்மா



Husband

Kanavar கணவர்



Wife

manaivi மனைவி



Elder Sister

Akka அக்கா



Younger Sister

Thangachchi தங்கச்சி



Elder Brother

Anna அண்ணா


Younger Brother

Thambi தம்பி

tamildictionary


English to Tamil Dictionary
Powered by Tamilcube.com






Wednesday, December 1, 2010

Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News - Dinamalar

 Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News - Dinamalar

கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி

சென்னை : "கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை' என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஜெயலலிதா துவங்கி அ.தி.மு.க., தொண்டர்கள் வரையிலும், சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், நான் ஏதோ சல்லிக்காசு கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும், என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்களையும் வாங்கிக் குவித்திருப்தைப் போலவும் பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள். நான் சிறு பருவத்திலே இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது. கடந்த 1949ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளர் பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.க., துவக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது, விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன்.

என், "மந்திரிகுமாரி' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் துவங்கியது. அப்போது சேலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன் என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என கேட்டார்; ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன். அதுபோலவே, "இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக வசனம் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடியதால், தயாரிப்பளர் எல்.வி.பிரசாத் என் வீட்டிற்கு வந்து முதலில் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார். நான் அந்தக் தொகையைக் கொண்டு திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய்சேய் நல விடுதி கட்டி, அதை அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை அழைத்துச் சென்று திறந்து வைத்தேன்.

அந்தக் காலகட்டத்தில் சென்னை தி.நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள், கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே 5,000 ரூபாய் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு, எனக்கு ஒரு கார் வாங்கித் தந்தார். அந்த காரில் என்னை உட்கார வைத்து கலைவாணரே ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். எல்லா முதல்வர்களின் வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலே தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை, வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடு கூட நான் அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான்.

நான் இத்தனை பொறுப்புகளையும் என் 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக் கொண்டதும் இல்லை. இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வைப்பு நிதியாக ஐந்து கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும், சேமிப்பு கணக்கில் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது. நான் வசிக்கிற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுத்துள்ளேன். இந்த வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் விஷயத்தில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி.

நான் முதல் முறையாக முதல்வராக இருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வக்கீல் தவறு செய்த போது அவர் மீது நடவடிக்கை எடுத்தேன். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கவும், என் மீது இன்னும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுடையோர் காண்பதற்காக. முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஆன்-லைன் மூலம் மின்கட்டணம்: தமிழகம் முழுவதும் அறிமுகம்

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர், ஆன்-லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட சேவையை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில், இரண்டு கோடியே 10 லட்சம் தாழ்வழுத்த மின் நுகர்வோரும், 7,502 உயர் அழுத்த மின் நுகர்வோரும் உள்ளனர். கட்டணங்களை செலுத்த 2,711 வசூல் மையங்கள் செயல்படுகின்றன. தற்போது 15 நாட்கள் மின் கணக்கீடு, 15 நாட்கள் வசூல் என்ற முறை நடைமுறையில் உள்ளது.

வசூல் மையங்கள் பரவலாக இருந்த போதிலும், இறுதி நேரத்தில் மின்கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர் அதிகமாக இருப்பதால், நீண்ட வரிசையில் நின்று கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் சென்னை, கோவை மண்டலத்தில், ஆன்-லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாழ்வழுத்த மின் நுகர்வோரும், ஆன்-லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று துவக்கி வைத்தார். எரிசக்தித்துறை செயலர் டேவிதார், மின்வாரிய தலைவர் சி.பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பேட்டி: மாநிலம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், "இன்டர்நெட்' மூலம் மின் கட்டணம் செலுத்தும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 சதவீதம் பேர், "இன்டர்நெட்' மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். இனிவரும் காலங்களில் இது அதிகரிக்கும்.

உயர் மின் அழுத்த மின்நுகர்வோருக்கு நடைமுறையில் உள்ள மின்னணு கணக்கு சேவை (இ.சி.எஸ்.,) மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எல்லா நேரமும் மின் கட்டணம் செலுத்தும் இயந்திர வசதி சென்னையில் மூன்று இடங்களில் நடைமுறையில் உள்ளது. இவ்வசதியை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விரிவுபடுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி இருக்கும்போதெல்லாம் 99 சதவீத மின் கட்டணம் வசூல் நடந்து வருகிறது. தபால் நிலையங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு லட்சம் மின் இணைப்புகள், ஓராண்டுக்குள் வழங்கப்படும். இதற்காக கூடுதலாக 750 மெகாவாட் மின்சாரம் தேவை. இதை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

Home -

Home -