Sunday, May 22, 2011

பொதுவான பழமொழிகள்


தமிழ் - பழமொழி

* அகத்தினழகு முகத்தில் தெரியும்

* அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை

* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

* அடியாத மாடு படியாது.

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

* அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* ஆழம் தெரியாமல் காலை விடாதே.

* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.

* குரைக்கிற நாய் கடிக்காது.

* கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்

* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

* கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல

* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

* சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்

* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* தடியெடுத்தவன் தண்டக்காரன்.

* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

* தன் வினை தன்னைச் சுடும்.

* தனிமரம் தோப்பாகாது.

* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

* நிறைகுடம் தளம்பாது.

* தாட்சண்யவான் தரித்திரவான்

* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

* மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு

* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

* மைத்துணன் உதவி மலைபோல

* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

* யானை படுத்தாலும் குதிரை மட்டம்

* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

* வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்

* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

* விரலுக்குத் தக்கதே வீக்கம்.

* விளையும் பயிரை முளையிலே தெரியும்.

* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

* வெளுத்ததெல்லாம் பாலல்ல.

* வேலிக்கு ஓணான் சாட்சி.

* வைக்கோற் போர் நாய் போல.





No comments:

Post a Comment