Tuesday, August 17, 2010

Navagraha gallery Temples In Tamilnadu only



                                                                                                              

Thanjavur Celebrate arts

Tanjore Arts
Thanjavur is one of the chief political, literary and religious centres of southern India, known for its contribution to Carnatic music, it has produced many classical musicians and Bharathanatyam dancers. It has become the second most important site for the annual Natyanjali dance festival. Tiruvaiyaru, which is close to Thanjavur, is the place where the great musician Saint Tyagaraja lived. Here in Tiruvaiyaru every year in the Tamil month of 'Thai' (second half of January) Thyagaraja Aradhana will be held where musicians from all over the country will participate.Tanjore is well known for bronze sculptures and its unique painting style called Tanjore Painting, a percussion instrument called the Thavil, a divine classical string instrument Veenai and the Bobble head Thanjavur Dolls. The Tanjore paintings are very popular and are known around the world. The artists use a combination of canvas background with glass, metals, etc. to depict and decorate various scenes from Hindu mythology.

இந்தியா இலவச கலர் "டிவி' திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து

இலவச கலர் "டிவி' திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  Share  
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010,23:25 IST

புதுடில்லி : பொது மக்களுக்கு இலவசமாக கலர் "டிவி' வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

வெற்றி பெறும் பட்சத்தில், எல்லாருக்கும் இலவசமாக கலர் "டிவி' வழங்கப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அவ்வாறே பல கட்டங்களாக "டிவி'க்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து கலர் "டிவி'க்கள் வழங்கப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என, தென்காசியைச் சேர்ந்த வக்கீல் சுப்ரமணியம் பாலாஜி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மக்களுக்கு இலவசமாக காஸ் அடுப்புகள், வேட்டி, சேலைகள், நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில் எந்த தவறும் இல்லை; ஆனால், இலவச கலர் "டிவி'யால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியம் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியதாவது: ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டே இலவசமாக கலர் "டிவி'க்கள் வழங்கப்படுகின்றன. மனுதாரரின் வக்கீல், ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இதை பார்க்கலாம். ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை, மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Friday, August 13, 2010

DayVande Mataram

i wish you every success our friends and kith and kin here and there.


Thanks


R.Gnaanakumaran
Thanjavur

Tuesday, August 10, 2010

இளைஞர்மணிதெரியுமா உங்களுக்கு

இளைஞர்மணிதெரியுமா உங்களுக்கு?


First Published : 11 Aug 2010 02:50:51 AM IST

Last Updated :


இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகள்


வெளிநாட்டு வங்கிகளின் வரவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முதன்முதலில் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த வெளிநாட்டு வங்கி ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி. இது 1858-ல் இந்தியாவில் தனது கிளையைத் தொடங்கியது. அதன்பிறகு 1902-ல் சிட்டி வங்கி தனது கிளையை தொடங்கியது.



பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1953-ல் ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங்கிங் கார்ப்ட்ரேஷன் (ஹெச்எஸ்பிசி) செயல்படத் தொடங்கியது. 1990ல் உலகமயமாக்கலும், பொருளாதாரமயமாக்கலும் அரங்கேறிய சமயத்தில் பல வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்தன. ஏறக்குறைய உலகின் அனைத்து முன்னணி வங்கிகளும் தங்கள் கிளைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளன.



இங்குள்ள வெளிநாட்டு வங்கிகளில் புதிய தொழில்நுட்பங்களும் புதிய வங்கிக் கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக உள்நாட்டு வங்கிகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறின.



தற்போது இந்தியாவில் மொத்தம் 29 வெளிநாட்டு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான சில:



வெளிநாட்டு வங்கிகள்



ஏபிஎன் ஆம்ரோ வங்கி



அபு தாபி கமர்ஷியல் வங்கி



பாங்க் ஆப் சிலோன்



பிஎன்பி பரிபாஸ் வங்கி



சிட்டி வங்கி



சைனா டிரஸ்ட் கமர்ஷியல் வங்கி



டாயிஷ் (ஜெர்மனி) வங்கி



ஹெச்எஸ்பிசி வங்கி



ஜேபி மோர்கன் சேஸ் வங்கி



ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி



ஸ்காட்டியா (கனடா) வங்கி



தயிப் (பஹ்ரைன்) வங்கி

தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா

தமிழகம்செப்டம்பர் 25, 26-ல் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா


First Published : 08 Aug 2010 12:00:00 AM IST

Last Updated :


சென்னை, ஆக. 7: தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் அங்கு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.



ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.



கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:



ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா, தஞ்சை மாநகரில் செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் இரண்டு நாள்கள் சிறப்பாக நடத்தப்படும்.



இந்த விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளிலும் நடத்தப்படும். அதே நாள் மாலையில், தஞ்சைப் பெரிய கோயிலில் அனைத்திந்திய பரத நாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.



அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.



இரண்டாம் நாள்: இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சைப் பெரிய கோயிலில் பொது அரங்கமும் நடைபெறும்.



அன்றைய தினம் மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்படும்.



தஞ்சை மாநகருக்காக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் தொடங்கப்படும். அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு சான்றோர்கள், ஆன்றோர்கள், அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவர்.



பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவை ஒட்டி வரலாற்றுக் கண்காட்சி நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் க.அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம், வணி வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் உள்பட பலரும் பங்கேற்றனர்.





கட்டப்பட்ட காலம் எப்போது?





தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் 1006-ம் ஆண்டு தொடங்கி 1010-ம் ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.



தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் என்று பெரிய கோயில் அழைக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அது விளங்கி வருகிறது.



10-ம் நூற்றாண்டுக் காலத்தில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்த போது, ராஜராஜ சோழ மன்னனால் பெரிய கோயில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ராஜராஜேஸ்வரம் எனவும் பின்னர், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.



17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்ட போது, பிருகதீசுவரம் ஆனது. இந்தக் கோயில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியச் சின்னமாக கடந்த 1987-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.