Thursday, September 30, 2010

ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார் : அதிர்ச்சி தகவல்

ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார் : அதிர்ச்சி தகவல்
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010,23:10 IST
மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 29,2010,02:50 IST
print e-mail   Buzz  Share  

..
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010,23:10 IST
மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 29,2010,02:50 IST

வாஷிங்டன் : "அமெரிக்கர்களில் ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார்' என, அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், இது 2008ல் இருந்த அளவான 13.2 சதவீதத்தை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.36 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதாவது, ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார். கடந்த 2008ல் நடந்த கணக்கெடுப்பில் 3.98 கோடி பேர் வறுமையில் வாழ்ந்தனர். தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒபாமா அதிபராக பதவியேற்ற காலக்கட்டத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, மாதந்தோறும் 7 லட்சம் பேர் வேலை இழந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு, கூடாரங்கள் அமைத்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்


தன்னம்பிக்கை உடையவரா நீங்கள் - 29-09-2010
மனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.
ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.

எண்ணங்கள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* என்னால் முடியாது
* இது மிகவும் கஷ்டம்
* இது எப்படி என்று எனக்கு தெரியாது
* இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை
* இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.
* என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

உணர்வுகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* சந்தேகம்
* வரப்போவதை நினைத்து பயம்
* எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை
* தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்
* புதிய சூழ்நிலையில் எதையோ நினைத்து பயம்
* மனக்கசப்பு
* குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை

நடத்தைகள்: தன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு
* பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு
* யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்
* புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.
* தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.
* எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
* கடைசி பெஞ்சில் அமர்வது
* மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல்

உடல்ரீதியான அறிகுறிகள்: தன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* தலைகுனிந்து நிற்பது.
* கண்களைப் பார்த்து பேசாதது
* அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது
* பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது
* சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.

இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.

Wednesday, September 29, 2010

இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?

Add caption
கூகுள் இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2010,23:44 IST
லண்டன் : கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு எழுத்தாளர் நிக்கோலஸ். இவர் இணையதளங்கள் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து "தி ஷாலோஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் கூகுள் இணையதளத்தில் உடனுக்குடன் வரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: இணையதளங்களை பார்க்கும் போது நமது மூளை இயல்பை விட சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் மூளையில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் இணையதளத்தில் தகவல் மற்றும் இணையதளங்களை தேடும் போது, அது நமது மூளையின் செயல்பாட்டை விஞ்சிய வேகத்தில் தகவல்களை தருவதால், பாதிப்புகளை உண்டாக்குகிறது.

வாடிக்கையாளர் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்வேர் நிபுணர்கள் பல புதிய யுக்திகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளங்களில் நாம் வேகமாக பணிகளை செய்ய முடிகிறது. ஆனால் அந்த அளவிற்கு மூளையும் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவதால் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. என்னை கவர்ந்த தேடுதல் இணையதளம் கூகுள். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்தின் அர்த்தத்தை வைத்து தேடி முடிவுகள் தெரிவிப்பதற்குள் அடுத்த முடிவுகளுக்கு செல்லும் அளவிற்கு கூகுள் இணையதளம் வேகமாக செயல்டுகிறது. இதுவே பாதிப்புகளுக்கு காரணம். இதேபோன்று செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ்., வழிகாட்டும் தொழில்நுட்ப முறையும் மனித மூளையின் ஆற்றலை குறைக்கிறது. இவ்வாறு நிக்கோலஸ் கூறினார்.

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை

First Published : 30 Sep 2010 12:35:00 AM IST

Last Updated : 30 Sep 2010 04:25:38 AM IST

சென்னை, செப். 29: வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்ட அறிவிப்பு:பதிவு செய்தவர்கள் தங்களது பதிவினை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கும் மாதத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களிலோ தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை கால அவகாசம் ஒரே ஒருமுறை மட்டும் சலுகையாக வழங்கப்பட்டு வந்தது.இப்போது அரசால் கம்ப்யூட்டர் வழியே ஒருங்கிணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனில் புதுப்பிக்க ஏதுவாக ஒரேசீரான நடைமுறை கடைப்பிடிக்கும் வகையில் 18 மாத புதுப்பித்தல் சலுகையை மறுமுறை கோரினாலும் அனுமதிக்கலாம் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த 18 மாத புதுப்பித்தல் சலுகை தளர்த்தப்பட்டு அடுத்த புதுப்பித்தல் தேதிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு, விடுபட்ட பதிவினை 18 மாத சலுகையின்படி, புதுப்பிக்கையில் பழைய பதிவு மூப்பு கணக்கில் கொள்ளப்படும் என தனது அறிவிப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அந்துமணி

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010,00:00 IST
thanks dinamalar

கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார் நண்பர் ஒருவர். ஒருநாள் விட்டு, ஒருநாள் போன் போட்டு பேசாமல் இருக்க மாட்டார். நேரில் பார்க்க வேண்டும் என தொல்லை கொடுப்பார். சந்தித்த பின், என் முகத்தை பார்த்தபடியே, "கம்'மென அமர்ந்து இருப்பார். என்னவென்று கேட்டால், "உங்கள் முகத்திலிருந்து வீசும் ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தாலே என் மன பலம் கூடுகிறது...' என, பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கித் தலையில் வைப்பார்.
இப்படிப்பட்ட ஐஸ்களில் மயங்குபவனா நான்... "சரி... சரி... வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்...' என்பேன்.
கடந்த வாரத்தில் ஒருநாள் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, "கம்ப்யூட்டர் ஆணா... பெண்ணா... சொல்லுங்க...' என்றார்.
இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்ததே இல்லை... கொஞ்ச நேரம் விழித்து விட்டு, "தெரியலியே...' என்றேன்.
நண்பரே சொன்னார்:  
ஆண்பால், பெண்பால் வேறுபடுத்தி காட்ட வார்த்தைகள் உள்ளன. ஆங்கிலத்தில் உயிரற்ற பொருட்கள் சிலவற்றையும் பெண் பாலாக அழைப்பது உண்டு. உதாரணமாக, கப்பல் உயிரற்ற பொருள்; ஆனால், அதை ஆங்கிலத்தில் பெண் பாலாகக் கூறுவர்.
"கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது இவ்வாறு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு துடுக்கான மாணவன், எழுந்து, "கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது?' என்று கேட்டான்.
"ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை; மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும், மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து, இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார்.
"இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், "கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும்... மாணவர்கள் அனைவரும், "கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?
மாணவியர் கூறிய விடை:
* கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை, "பவர் ஆன்' செய்தல் வேண்டும்.
* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.
* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.
* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!
"இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று மாணவிகள் முடிவு கூறினர்.
"கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம் என்பது மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?
* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.
"இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... இந்த சமாச்சாரம், "நெட்'டில் படித்தது...' என்றார் நண்பர்.
— கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரே... உங்கள் அனுமானம் என்ன?
***
சமீபத்தில், கோவையில் இருந்து கிளம்பி ஈரோடு செல்லும் வழியில் திருப்பூர் சென்றோம். பனியன் தொழிலில் புகழ்பெற்ற திருப்பூர். பனியன் ஏற்றுமதியால் அங்கு மக்கள் மத்தியில் செல்வச் செழிப்பு அதிகம்.
தூசி படிந்த சிறிய, சிறிய சாலைகளில் கசமுசா டிராபிக்; மாட்டு வண்டிகள் ஏராளம்.
ஊரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென லென்ஸ் மாமா, "அந்து... இங்கே பாரு... அந்த பனியன் கம்பெனி வாசலில், "டேமேஜர் தேவை!' என எழுதி வைத்திருக்கின்றனர்... மானேஜர் என்பதை டேமேஜர் எனத் தவறாக எழுதி விட்டனரா?' எனக் கேட்டு, கட, கடவெனச் சிரித்தார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
அடுத்த தெரு ஒன்றில் சுற்றி வரும்போது,
"டேமேஜர் தேவை...' போர்டு தொங்கியது.
"சரியான ஊரப்பா... இந்த ஊர் ஆட்களுக்கு, "இங்கிலீஷ்' வரவே வராது போலும்...
"டேமேஜ்'ன்னா உடைஞ்சு போறது, சேதமாறது, நஷ்டமாறது... இதைச் செய்ய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்கின்றனரே...' என்று புலம்பிய லென்ஸ் மாமாவிடம், "இங்கே பாருங்க...' என இன்னொரு நிறுவனத்தின் வாசலில் தொங்கிய அட்டையைக் காட்டினேன்.
அதில் —
"டேமேஜ் செக்கர் தேவை!' என எழுதப்பட்டு இருந்தது.
பனியன்கள் தைக்கப்பட்ட பின், அவற்றில் சேதம் ஏதும் இருக்கிறதா என சோதனை செய்ய ஆள் தேவை என்பதையே சுருக்கமாக; அந்த ஊர் மக்கள் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தையாக, "டேமேஜர்' என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.   என்பதைப் புரிந்து கொண்டோம்.
திருப்பூரில் உள்ள 90 சதவீத பனியன் பாக்டரிகளின் வாசல்களிலும், "டெய்லர்கள், ஹெல்பர்கள், காஜா எடுப்பவர்கள், டேமேஜ் செக்கர்கள் தேவை!' என்ற போர்டை காண முடிந்தது.
டெய்லரிங் துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் ஏதாவது ஒரு சாதாரண பணி திருப்பூரில் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.
"வேலைக்கு ஆட்கள் தேவை... தேவை...' எனக் கூப்பிடுகின்றனர். செல்வம் கொழிக்கும் பகுதி; கவர்னர் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்ம ஊர், "வி.ஓ.,'க்கள், (பொருள் தெரியும் தானே? "வெட்டி ஆபிசர்கள்!') கவர்னர் பணி கிட்டும் வரை திருப்பூரை தமக்கு சோறு போடும் ஊராக்கிக் கொள்ளலாம்.
***
"கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்றார் எவரோ; உண்மை தான்! நான் சொல்லும் புதுமொழிகள் எப்படி?' எனக் கேட்டபடி, நண்பர் ஒருவர் கூறியது...
* பெட்டி, படுக்கைகளை உற்று, உற்றுப் பார்க்கிறவன் திருடனாக இருக்க வேண்டுமென்பதில்லை; திருட்டுக் கொடுத்து விட்டுத் தேடுகிறவனாகவும் இருக்கலாம்.
* இருமிக் கொண்டிருப்பவன் நோயாளியாக இருக்க வேண்டுமென்பதில்லை; டாக்டராகவும் இருக்கலாம்.
* வகுப்பில் முன் வரிசையில் உட்காருவதால் மட்டும் ஒருவன் புத்திசாலி என்பதில்லை; காது கோளாறு காரணமாகவும் இருக்கலாம்.
* சுவரை வெள்ளையடிப்பது, அதைத் தூய்மைப்படுத்தத் தான் என்பதில்லை; கண்ட விளம்பரங்கள் எழுதி அசிங்கப்படுத்தவும் இருக்கலாம்.
* முதலாளி தொழிலாளியைத் திட்டுவது அவன் குற்றம் செய்து விட்டதற்காக என்பதல்ல; சம்பள உயர்வு கேட்டதற்காகவும் இருக்கலாம்.
* விமானம் ஏறுபவன் வெளிநாடு செல்கிறான் என்பதில்லை; ஹைஜாக் பண்ணவும் இருக்கலாம்.

About Work

Hai

Before you Start some work

Always ask yourself three Questions

1.Why am i doing it

2.What the results might be and will i be successful.

3.Only when you think deeply and find satisfactory answers to these questions go ahead

by Chanakya

Monday, September 27, 2010

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு அமைச்சர் உபயதுல்லா

கலை உள்ளம் படைத்தவர் ராஜராஜன் அமைச்சர் உபயதுல்லா


27 Sep 2010 12:52:53 PM IST
தஞ்சாவூர், செப். 26: மாமன்னர் ராஜராஜ சோழன் கலை உள்ளம் படைத்தவர் என்றார் மாநில வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா.



ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலுக்கு நடத்தப்படும் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் காணும் பேறு கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. கல்வெட்டுகளின் மூலம் ராஜராஜன் மிகுந்த கலை உள்ளம் படைத்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமயப் பொது நிலை என்பதில் ராஜராஜனையும், முதல்வர் கருணாநிதியையும் ஒரு சேரப் பார்க்கலாம் என்றார் உபயதுல்லா.


தமிழனை எழுச்சியுற செய்தவர் ராஜராஜன்

தஞ்சாவூர், செப். 26: வீழ்ச்சியுற்ற தமிழனை எழுச்சியுறச் செய்தவர் ராஜராஜன் என்றார் மாநில நிதியமைச்சர் க. அன்பழகன்.


தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோர்வுற்றுக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியவர் ராஜராஜன். அவரது காலத்தில்தான் பல கட்டங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழனின் வரலாறு சரியான முறையில் தெளிவான வகையில் வரையறுக்கப்படவில்லை. தமிழன் வரலாறுதான் உலகிற்கே முதன்மையான தனித்தன்மையுடன் விளங்குகிறது. வரலாற்றுச் செய்திகள் இல்லை என்றாலும்கூட, தமிழ் மொழியே ஒரு வரலாறுதான்.

அந்தக் காலத்திலேயே சிறப்பான நிர்வாகத் திறன் கொண்டு ஆட்சி புரிந்தவர் ராஜராஜன். எனினும், அந்தக் காலத்திலும் சமுதாயக் குறைகளும் இருந்தன. சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. நிலம் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்பது போன்ற நிலைகளும் இருந்துள்ளன. மக்களின் மனதை எண்ணிப் பார்க்கக்கூடிய மன்னராக ராஜராஜன் இருந்துள்ளார். தில்லை கோயிலில் அடைபட்டுக் கிடந்த தேவார திருமுறைச் சுவடிகளை மீட்டு, திருக்கோயில்களில் திருமுறைகளைப் பாட வைத்தார். தஞ்சை கோயிலில்கூட வடமொழிப் பாடல் பாடுவோர் 3 பேர், தமிழில் திருமுறை பாடுவோர் 4 பேர் என தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து பணிக்கு அமர்த்தியிருந்தார் ராஜராஜன்.

மேலும் இசை, நாட்டியம், கட்டடக் கலையை வளர்த்த பெருமைக்குரியவர் ராஜராஜன் என்றார் அன்பழகன்.

தஞ்சை பெரிய கோயிலில் 50 பேர் பங்கேற்ற திருமறை ஓதுதல் நிகழ்ச்சி


First Published : 27 Sep 2010 12:54:36 PM ISTLast Updated :

தஞ்சாவூர், செப். 26: தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்ற திருமறை ஓதும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.


ராஜராஜன் காலத்திற்கு முன் வாழ்ந்த நால்வர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் எழுதிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட நூல்களிலுள்ள பாடல்கள் திருமறை எனக் கூறப்படுகிறது.

இந்தத் திருமறையின் மீது ராஜராஜனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. சிதம்பரம் கோயிலில் இருந்த திருமறைப் பாடல்களை மீட்டு வந்து, பெரிய கோயிலில் வழிபாட்டிற்கு பாடச் செய்தவர் ராஜராஜன்.

இதற்காக சுற்றுப் பகுதியிலிருந்து 400 தலிச்சேரி பெண்களை கோயிலில் தங்க வைத்து தமிழ் கற்றுக் கொடுத்து, இசைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தினமும் மாலை திருமறைப் பாடல்களை பாடச் செய்தார்.

திருமறை மீது ராஜராஜனுக்கு இருந்த ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, பெரிய கோயிலில் சதய விழாவின் போது திருமறை ஓதுவதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.

தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தினர் கடந்த 82 ஆண்டுகளாக திருமறை ஓதுதல் நிகழ்ச்சியை பெரிய கோயிலில் அரங்கேற்றி வருகின்றனர். பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, 10 ஓதுவார்கள் தலைமையில், களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 40 சிறார்கள் பங்கேற்று திருமறை ஓதினார்கள்.

இதுகுறித்து களிமேடு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகாபதி கூறியது:

அப்பர் மீது பற்றுக் கொண்டு களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் தொடங்கியுள்ளோம். மார்கழி மாத பஜனையின் போது இக் கிராமத்திலுள்ள சிறுவர், சிறுமிகள் திருமறை ஓதியபடி வீதியுலா வருவார்கள். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய கோயிலில் திருமறை ஓதி வருகிறோம் என்றார் அம்பிகாபதி.

இந்த நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் முத்து, குணசேகரன், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவாக, திருமறை ஓதிய ஓதுவார்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தஞ்சை பெரிய கோயில் விழா ராஜராஜன்!

























Sunday, September 26, 2010

ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!

ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!




முனைவர் ராம. கெüசல்யா,First Published : 26 Sep 2010 12:00:00 AM IST



Last Updated :





திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வர்



ரிடத்தில் கலைகள் செழிக்க வேண்டுமானால் மூன்று கூறுகள் தேவை. அவை கலைஞர்கள், சுவைஞர்கள், புரவலர்கள். எப்பொழுது கலையை ரசிக்க முடியும்? நாடு அமைதியாக இருக்கவேண்டும், வளமாக இருக்கவேண்டும். இது நாட்டைக் காக்கும் மன்னனின் பொறுப்பு.



இத்தகைய மண்தான் சோழ நாடு. சோழ மன்னர்கள் குறிப்பாக ராஜராஜ மாமன்னன் தான் எடுத்த ராஜராஜேச்சுரத்தை (பெரிய கோயில்) கலைகளின் தாயகமாக ஆக்கினான். நாட்டியக் கலைக்கு அம்மன்னன் செய்த தொண்டு அளப்பரியது. இறைவனுக்கு நடத்தப்படும் 16 வகை வழிபாடல்களுள் ஆடலும் ஒன்று.



எதையுமே பிரம்மாண்டமாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் ராஜராஜன் பெருவுடையாரின் வழிபாட்டுக்காக 407 ஆடல் மகளிரைத் தஞ்சையிலே குடியமர்த்துகிறார். தளிச்சேரிப் பெண்கள் (தளி - கோவில், சேரி- குடியிருப்பு) தளிப்பெண்கள் என்று அழைக்கப்பட்ட இவர்களுக்காக கோயிலுக்கு அருகில் தளிச்சேரியை அமைக்கிறார்.



தெற்குத் தளிச்சேரி வடக்குத் தளிச்சேரி ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் தென் சிறகு, வடமேல் சிறகு ஆகிய வரிசைகளும் மேலும் ஒரு தெருவும் இவர்களுக்காக உருவாகிறது. இது தொடர்பான அத்தனை செய்திகளையும் ஒரு நீண்ட கல்வெட்டில் தருகிறார். இப்பெண்களின் பெயர், இவர்கள் எந்த ஊரிலிருந்து அழைத்து வந்தவர்கள், அவர்கள் எந்தத் தெருவில் எந்த இலக்கமிட்ட வீட்டில் குடியமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கான ஊதியம் ஆகிய அனைத்துச் செய்திகளும் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றன.



ஓர் ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில் இருந்தால் இப்பெண் எந்தக் கோவிலைச் சேர்ந்தவர் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களோடு இவர்களுக்கு உதவ நாட்டிய ஆசிரியர்களும் பாடகர்கள் கருவியாளர்கள் உள்ளிட்ட பக்க இசைக் குழுவினரும் உண்டு. இவர்களுக்கு உதவ தச்சுவேலை செய்பவர் உள்ளிட்ட தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பெயர்கள், துறைகள், ஊதியம் ஆகிய அனைத்து விவரங்களும் இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ளன.



மேலும் இவர்களுள் யாரேனும் இறந்துவிட்டாலோ வேறு ஊருக்குச் சென்று விட்டாலோ அவர்களது குடும்பத்தில் அடுத்தவர் அவ்விடத்தில் பணியாற்றி ஊதியம் பெற்றுக் கொள்ளலாம். அடுத்தவர் தகுதியற்றவராக இருந்தால் தகுதியான ஒருவரை நியமித்து அந்த ஊதியத்தை அவர் பெற்றுக் கொள்ளலாம். யாரும் இல்லாமல்போய் விட்டாலோ நியாயத்தாரரே தகுதியான ஒருவரை நியமிக்கலாம். இவ்வாறு இறைவனுக்கான பணி இடைவிடாது நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சோழ நாட்டின் பல்வேறு திருத்தலங்களிலிருந்தும் இத்தகைய ஆடல் மகளிர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.



சில ஊர்களில் ஒன்றிற்கு மேற்பட்ட தளிசேரிகள் இருந்திருக்கின்றன. திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் மாதேவிக்கு சிவன் கோவில்களிலிருந்து மட்டும் அல்லாமல் திருமால் கோவில்களிலிருந்தும் ஆடல் மகளிர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாமணிக் கோவில், அம்பர், அவனி நாராயண விண்ணகர் போன்ற வைணவத் தலப் பெயர்களும் காணப்படுகின்றன.



இவர்களது பெயர்களில் குந்தவை, மாதேவடிகள் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. அரச குடும்பத்தின் மீது இவர்கள் கொண்ட பக்தி விசுவாசம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இப்பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்தார்கள் போலும்.



அன்றாட ஆடல் அர்பணிப்புக்காக ஆடல் மகளிரைக் குடியமர்த்திய மன்னர் ஆடல் குறித்த இலக்கணப் பகுதி ஒன்றை நிரந்தரமாகக் கல்லிலேயே செதுக்கி வைத்திருக்கும் செயல் பிரமிக்க வைக்கிறது. இக்கோயிலிலே காணப்படும் கரண சிற்பங்களே இவை. கரணம் என்ற சொல்லிற்கு செயல் என்பது பொருள். பரதநாட்டியத்தில் இது ஒரு கூறு. "ஹஸ்த பாத ஸம்யோகோ கரணம் பவேத்' கை கால்களின் ஒருங்கிணைந்த இசைவு "கரணம்' ஆகும். என்றாலும் இதனோடு உடல் நிலையும் சேரவேண்டும். அசைவின் ஓர் உரைநிலைத் தருணம் (ஊதஞழஉச ஙஞஙஉசப). உண்மையில் இது ஒரு முழு இயக்கம்தான்.



இயக்கத்தின் ஓர் உரைநிலைத் தருணம், தொடக்கம், முடிவு ஆகியவற்றுள் எதுவாகவும் இது இருக்கலாம். இவை 108 என்று வரையறுக்கப்பட்டுள்ளது.



பெரியகோயிலின் கருவறையைச் சுற்றி 11 அடி கனத்துக்கு ஒரு சுற்றுச்சுவர் உள்ளது அதையடுத்து ஓர் உள்சுற்று அறை காணப்படுகிறது. இதனை "சாந்தாரம்' என்கிறார்கள். இச்சாந்தாரத்தின் வெளிப்புறச்சுவர் 13 அடி கனம் கொண்டது. இந்த உள்சுற்று அறையான சாந்தாரத்தின் அகலம் 6 அடி. இந்த அறையில்தான் சிறப்பு மிக்க சோழர் கால ஓவியங்கள் உள்ளன. மேலுள்ள முதல் தளத்தில்தான் இக்கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தலையை உயர்த்தாமல் சம மட்டத்திலிருந்து பார்க்கும் வண்ணம் இவை வரிசையாக அமைந்திருக்கின்றன. இத்தளத்தில் கரண சிற்பங்கள் இருப்பது வெளி உலகுக்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தெரியாமலே இருந்தது. 1954 ஆம் ஆண்டில் தொல்லியல் துறை அலுவலர் கே. ஆர். ஸ்ரீனிவாசன் என்பவரே இதனை முதலில் கண்டுபிடித்தார்.



கரணங்கள் 2 அடி உயரக் கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டிருக்கின்றன. 108 கரணங்களுள் முதல் 81 கரணங்களே செதுக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய கரணங்களுக்கான கற்கல் தயார் நிலையில் இருக்கின்றன. என்ன காரணத்தாலோ இவை முழுமைப்படுத்தப்படவில்லை.



சிவபெருமான் நான்கு கரங்களுடன் இவற்றை ஆடிக் காட்டுவதாக இவை அமைக்கப் பட்டுள்ளன. சிவகணங்கள் கருவிகளை இசைத்துக் கொண்டோ பார்த்துக் கொண்டோ அருகில் இருக்கின்றன. தலபுட்பபுடம் என்னும் முதல் கரணம் முதல் சர்ப்பிணி என்னும் 81 வது கரணம் வரை இவை உள்ளன. இங்குள்ள வரிசை முறையே நாட்டிய சாத்திரத்திலும் காணப்படுகிறது. அரசு நிர்வாகத்திலிருந்து நிலத்தைப் பகுப்பது வரை அனைத்தையும் செம்மைப்படுத்திய மன்னன் ஆடலின் கூறுகளையும் நிலையாக செம்மைப்படுத்திக் காட்ட விழைந்ததன் வெளிப்பாடே இவை எனலாம்.



ஆடலோ ஒரு நிகழ்த்துக்கலை. நிகழ்த்துக்கலை என்பது நிகழ்த்தப்படும் அக்கணமே சுவைக்கப்படக் கூடியது. என்னதான் சொற்களால் பின்னர் வருணித்தாலும் அதனைச் சரியாக நம் கண் முன்னால் கொண்டு வர இயலாது. அப்படியே இயன்றவரை எழுதி வைத்தாலும் கால வெள்ளத்தில் அழிந்து போகலாம். கல்லிலே விளக்கங்களைப் பொறித்து வைத்தாலும் மாறான பொருள் விளக்கங்கள் தரப்படலாம். ஆகவேதான் சிற்பமாக வடித்துத் தந்திருக்கலாம். பொது மக்கள் நடமாடுகிற பகுதியில் வைக்க வேண்டாம் என்றும் அரச குடும்பத்தினரும் உயர் அலுவலர்களும் கலைஞர்களும் மட்டுமே புழங்கக் கூடிய பகுதியில் வைப்பதே பாதுகாப்பானது என்று மன்னர் முடிவு செய்திருக்கலாம்.



இம்முடிவுகளின் பயனால்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னும் சில அழிவு சக்திகளைச் சந்தித்த பிறகும் கரணங்கள் குறித்த சரியான விளக்கங்களை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன.

விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

தினமலர் முதல் பக்கம் » பொது செய்தி »தமிழ்நாடு


பிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்




பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2010,23:10 IST

மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 24,2010,02:19 IST

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.







இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.







மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.







யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.







திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.







எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.







வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.







எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.







மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.







கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.







விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.







இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.


பாலகுமாரன், தலைசிறந்த இலக்கிய படைப்பாளி, நாவலாசிரியர்

மர்ம வீரன் ராஜராஜன்

மர்ம வீரன் ராஜராஜன்!




First Published : 26 Sep 2010 12:00:00 AM IST



Last Updated :



சந்திரோதயம், ப. தங்கம்

மன்னன் ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டினான் என்பது தெரியும். அவன் ஒரு மர்ம வீரன் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அவன் கடலில் செய்த சாகசங்கள் எத்தனை பேருக்குத் தெரியும். அதிர்ச்சி அடையாதீர்கள். இது வரலாறு அல்ல. புனைவுதான். ஆனால், பார்க்கவும் படிக்கவும் திகட்டாத புனைவு.



இந்தப் புனைகதைக்குச் சொந்தக்காரர்கள் ஓவியர்கள் ப. தங்கம் - சந்திரோதயம் தம்பதி. இவர்கள் படைத்த "மர்ம வீரன் ராஜராஜன்' கதையில்தான் ராஜராஜன் மர்ம வீரனாக இருக்கிறான். இளவரசனான அவன் கடற்கொள்ளையர்களைப் பிடிக்கவும் தன் சகோதரி குந்தவையைக் கொலை முயற்சியிலிருந்து காக்கவும் கடலில் சாகசங்களில் ஈடுபடுகிறான். இறுதியில் கொள்ளையர்களை வீழ்த்தி தங்கையையும், கடல் வணிகர்களையும், நாட்டையும் காக்கிறான்.



ஓவியப் பயணம் குறித்து தங்கம்: ""கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. தமிழகத்தில் சென்னை, கும்பகோணத்தில் மட்டும் ஓவியக் கல்லூரிகள் உள்ளன. 1950-ல் கும்பகோணம் கீழ ஐயன் தெருவில் இருந்த இந்த ஓவியக் கல்லூரிக்குச் சித்திர கலாசாலை என்று பெயர். அதில்தான் 6 ஆண்டுகள் ஓவியம் கற்றுவந்தேன்.



அப்போது கல்கியின் "பார்த்திபன் கனவு', "சிவகாமியின் சபதம்' நம் தமிழக வரலாற்றுப் பின்னணியில் மிகவும் சுவைதரும் சரித்திர கதைகள் கல்கி மூலம் தமிழக வாசகர்களுக்குக் கிடைத்தன. அதன் பின்னர் கல்கி "பொன்னியின்செல்வன்' என்ற புகழ்பெற்ற சரித்திரக்கதையை எழுதினார். அதில் சோழர்கால நிகழ்ச்சிகள், எதிரிகளின் சதித்திட்டம், ரகசிய ஆலோசனைகளை அறிய ஒற்றர்படை இவற்றைக் குறித்தெல்லாம் சுவைபட எழுதியிருந்தார். அதைப் படித்த பின்னர் "பொன்னியின்செல்வன்' கதாபாத்திரங்கள் நம்மிடையே எப்போதும் உலா வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது.



ராஜராஜ சோழனின் இளமைப் பருவத்தை சித்திரக்கதையாக வரைவதற்கு மனதுக்குள் பெரிய ஆசை எழுந்தது. அப்போதெல்லாம் சாப்பிடும்போதும், நடந்து செல்லும்போதும்கூட அந்தக் காலத்திலேயே வாழ்ந்த உணர்வில் வாழ்ந்து கொண்டிருப்பேன். அதன் விளைவாக உருவானதே வீரசோழன் சித்திரக்கதை'' என்றார்.



தங்கத்தின் மனைவி சந்திரோதயம்: ""கும்பகோணத்தில் 1956-ம் ஆண்டில் குப்புசாமி ஐயரிடம் ஓவியம் கற்றுவந்தேன். அப்போது என் கணவர் நாளிதழ் ஒன்றில் ஓவியராக இருந்தார். அதில் அரேபிய நாயகனான சிந்துபாத்தின் சாகசங்கள் நிறைந்த கன்னித்தீவு மற்றும் கறுப்புக்கண்ணாடி சித்திரக் கதைகளை வரைந்து வந்தார். இந்நிலையில் 1960-ல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. உடனே என் கணவர் தஞ்சைக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக்கலைஞராக பணிபுரிந்தார். நான் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது நாங்கள் இருவரும் சித்திரக்கதை வரையும் ஆர்வத்தில் "தங்கப்பதுமை' என்ற சித்திர வார இதழ் தொடங்கி இளவரசி குந்தவை என்ற முதல் இதழை நடிகர் சிவாஜியின் கைகளால் வெளியிட்டோம்.



அதன் பின்னர் ராஜராஜசோழனின் வரலாற்றுப் பின்னணியில் ஒரு சித்திரக்கதை வரைவதற்கு என் கணவர் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரது தொடர் ஊக்கத்தின் காரணமாக உருவானதே "மர்ம வீரன் ராஜராஜன்'. அது பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களைக் கொண்ட நாவல் போன்றது. அதைப் படிப்பவர்கள் அக்காலத்துக்கே அழைத்துச் செல்லப்படுவதை உணரலாம்.



அதைத் தொடர்ந்து இருவரும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைத்து இரண்டாம் ராஜராஜனின் வரலாற்றுப் பின்னணியில் ராஜகம்பீரன் என்ற சித்திரக் கதையை வரைந்து வெளியிட்டோம்.''என்றார் சந்திரோதயம்.

பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி

பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி




முனைவர் அ. சற்குணன், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்First Published : 26 Sep 2010 12:00:00 AM IST





Last Updated :





தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.



தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.



இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..





பெரிய கோயில் அளவுகோல்...



எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.



தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.



இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்



1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.



பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு



180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்



13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.



அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.



சாரங்களின் அமைப்பு



கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.



இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.



இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள



உதவின.



அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.



மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.





சோழர் நகரம்!









தெருக்கள்



(தஞ்சாவூர்ப் புறம்படி)



காந்தர்வத் தெரு, மடைப்பள்ளித் தெரு, வில்லிகள் தெரு, ஆணைகடுவார் தெரு, ஆனை ஆட்கள் தெரு, பன்மையார் தெரு, சாலியத் தெரு.



பெருந்தெருக்கள்



மும்முடிச்சோழப் பெருந்தெரு, நித்தவினோதப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, செயங்கொண்ட சோழப் பெருந்தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, சூரசிகாமணிப் பெருந்தெரு.



சோழ மன்னர்கள் பெயரில் ஆறுகள்



முடி கொண்ட சோழப் பேராறு, தண் பொருத்தமான முடி கொண்ட சோழப் பேராறு, சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு, அகளங்கப் பேராறு, மதுராந்தக வடவாறு, வீரசோழ வடவாறு, வீரராசேந்திர சோழ வடவாறு, விக்கிரமனாறு, கரி



காலச் சோழப் பேராறு (கொள்ளிடம்), வீரசோழனாறு.



பேரங்காடி



(தற்போதைய சூப்பர் மார்க்கெட் முறை) திரிபுவன மாதேவி பேரங்காடி.







சோழர்கால நாணயங்கள்







கி.பி. 985}1014 காலகட்டத்தில் இலங்கையில்



ராஜராஜ சோழனால்



புழக்கத்துக்கு விடப்பட்ட



தங்க நாணயங்கள்.

செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 : முதல்வர் அறிவிப்பு

செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 : முதல்வர் அறிவிப்பு



பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010,23:46 IST

மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 27,2010,09:04 IST


தஞ்சை : செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன். என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.



தஞ்சை பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:ராஜராஜனுக்கு நாம் பெருமை சேர்க்கவில்லை. நமக்குத்தான் ராஜராஜன் புகழை பிச்சையாக வழங்கியுள்ளான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்னாதி மன்னன் ராஜராஜன். உள்ளூர் ஆட்சி முறை, கலை, சமயம், இலக்கியம் என பல்வேறு துறைகளில், பிற்காலங்களில் மீண்டும் அடைய முடியாத மேன்மையை அப்போதே தமிழகம் பெற்றது.

சோழர்களுடைய பாரம்பரியம் கி.மு., - கி.பி., என்று பகுத்து பார்க்கும் போது, 176 ஆண்டு ஒரு சேர சோழப் பேரரசு தென்னகத்தில் இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. அப்போது, தஞ்சை, சோழப்பேரரசின் தலைநகராக இருந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தில், குறிப்பாக ராஜராஜன் நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் உதாரணமாக விளங்கியது. ராஜராஜன் திரட்டிய நிதி எப்படியெல்லாம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியாது. மக்களின் நலவாழ்வுக்கு, நாட்டை காப்பாற்ற, வசூலிக்கப்பட்ட வரிப்பணம் செலவிடப்பட்டது.

வரியை வசூலித்து, மக்களுடைய பணத்தை திரட்டி இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அரசு, ஒவ்வொருவர் தலையிலும் இவ்வளவு கடனை சுமத்தியிருக்கிறது என்று பேசுகின்றனர். அப்படி மக்கள் தலையில் கடனை சுமத்தும் எந்த அரசும் இந்தியாவில் இல்லை. அப்படிப்பட்ட அரசும் தமிழக அரசு இல்லை. நாம் வாங்கும் கடன்களை மக்கள் தொகையால் வகுத்து புத்திசாலி அரசியல்வாதிகள், தலைக்கு இவ்வளவு கடன் என்று சொல்கின்றனர்.நாம் வாங்கும் கடன்கள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க போர் உருவாக்கப்பட்டது. அதற்கு உலகளந்த போர் என்று பெயர். ராஜராஜன் சைவன் என்றாலும் சமணத்தையோ, பவுத்தத்தையோ வெறுத்தவன் அல்ல.

ராஜராஜன் காலத்தில் ஊராட்சித் தலைவர்களாக, கால்வேலி சொந்த நிலம் இருக்க வேண்டும். படித்தவனாகவும், எதையும் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மை உள்ளவனாகவும், எண்ணத்திலும், செயலிலும் தூய்மை உடையவனாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவனாகவும், ஒழுக்கம் மிகுந்தவனாகவும், குற்றமில்லாதவனாகவும் இருக்க வேண்டும்.


கள்ளக் கையெழுத்து போட்டோர், லஞ்சம் வாங்கியவர், அபராதம் செலுத்தியவர் போட்டியிட முடியாது என்பது, ராஜராஜன் காலத்தில் விதிமுறைகளாக இருந்தது. இப்போது போட்ட கையெழுத்தையே சிலர் இல்லை என்று கூறுகின்றனர்.ராஜராஜன் காலத்தில் குடவோலை முறையில் உள்ளூர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழன் நிர்வாகத்திறமை, கவிதைத்தன்மை, வீரத்தின் விளைநிலமாக இருப்பான். ராஜராஜன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத பகுதிகள் இல்லை. அவனைக்கண்டு அஞ்சாதவர்கள் இல்லை.பல போர்களில் தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான் ராஜேந்திரன். ராஜராஜன் பெயர் இந்த கோவிலில் ஆயிரம் ஆண்டு நிலைத்து, ஆயிரமாவது ஆண்டை நாம் கொண்டாடும் நேரத்தில், அடுத்த ஆயிரமாவது விழா நடத்தும் போது நாம் இருக்கப்போவதும் இல்லை.



இரண்டாயிரமாவது ஆண்டு விழா நடக்கும் போது, நம்மை யாரும் மறக்கப்போவதுமில்லை. பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் வேளையில், தஞ்சை நகரின் வளர்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தவிர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், சாலை வசதி மேம்படுத்தப்படுகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு என்று தனியாக பிரிவு ஏற்படுத்தப்படும்.தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிபோல், மத்திய அரசும் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய திட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

அந்த நிதி இன்னும் வந்துசேரவில்லை. அதை சேர வைக்கும் வேலையை அவரே செய்ய வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன். இது, தமிழக மக்கள் எப்போதும் ராஜராஜனை நினைத்துக் கொண்டிருக்க உதவும். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சோழர்கால வரலாற்று கண்காட்சி மேலும் ஒருவார காலம் வரை நீடிக்கப்படுகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

ராஜராஜன்நேருபார்வையில்

ராஜராஜன் நேருவின் பார்வையில்




முனைவர் பா.ஜம்புலிங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்First Published : 26 Sep 2010 12:00:00 AM IST




Last Updated :

கட்டிக் கொண்டிருக்கும்போதே சரிந்து விழும் "காமன்வெல்த்' களேபரங்களுக்கு நடுவே, தமிழக கட்டடக் கலைக்கு ஆயிரம் ஆண்டு சாட்சியாக நிற்கிறது ராஜராஜனின் பெரிய கோவில். இந்த வார கொண்டாட்டம் அந்தப் பெருமிதத்தைப் பறைசாற்றுகிறது! -ஆசிரியர்

கல்கியின் "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் அக்காலகட்டத்துக்கே செல்லும் உணர்வைப் பெறுவர்.


ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்களுக்கு மிகவும் நெருக்க


மாவதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடும்.


இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திரா


பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போதும் இவ்வுணர்வு ஏற்படும். இக்கடிதத் தொகுப்பைக் கொண்ட "உலக வரலாறு' (எப்ண்ம்ல்ள்ங்ள் ஞச் ரர்ழ்ப்க் ஏண்ள்ற்ர்ழ்ஹ்) என்ற நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தந்த இடங்களுக்கே சென்ற உணர்வைத் தரும்படி அவர் எழுதியுள்ளார்.


""பள்ளியிலோ, கல்லூரியிலோ நாம் அறிந்துகொள்ளும் வரலாறு போதுமானதல்ல. மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் பள்ளிக்காலத்தில் ஓரளவே கற்றுக் கொண்டுள்ளேன். சிறிதளவே இந்திய வரலாற்றையும், இங்கிலாந்து வரலாற்றையும் கற்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப் பற்றிய தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே. கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர்தான் சில உண்மையான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய சிறைவாசம் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது''.

ஒவ்வொரு கடிதத்தின் ஆரம்பத்திலோ முடிவிலோ இவ்வாறான கருத்துக்ளைத் தெரிவித்து மகளை தன் கடிதத்துடன் நேரு பிணைக்கிறார். உலக அரங்கில் அவர் தொடாத துறையே இல்லை என்று கூறுமளவு அனைத்துச் செய்திகளைப் பற்றிய கடிதங்களை எழுதியுள்ள நேரு, தன் நூலில் மாமன்னன் இராஜராஜனைப் பற்றியும், இராஜேந்திரனைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.


தென்னிந்தியா பல மன்னர்களையும், போராளிகளையும் ஒரு பெரும் மனிதனையும் உருவாக்கியுள்ளது என்ற தலைப்பில் 13.5.1932 அன்று எழுதியுள்ள கடிதத்தில் ஹர்ஷரின் மரணம் தொடங்கி பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். பல்லவர், பாண்டியர் பற்றி எழுதியபின் சோழர்களைப் பற்றி எழுதுகிறார்.


""சோழராட்சி 9-ம் நூற்றாண்டின் நடுவில் தென்னகம் முழுதும் பரவ ஆரம்பித்தது. கடலிலும், அதன் ஆதிக்கம் இருந்தது. வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிலும் பெரிய கடற்படையைக் கொண்டிருந்தது. சோழர்களின் முக்கிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். சோழராட்சிக்கு அடிகோலிய விஜயாலயன் மிகப்பெரிய மன்னன். சோழர்கள் வடக்கே தம் எல்லையை விரிவுப்படுத்தத் தொடங்கியபோது திடீரென ராஷ்ட்ர கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், மறுபடியும் இராஜராஜன் காலத்தில் எல்லை விரிவடைய ஆரம்பித்ததுடன் பழம்பெருமையும் தக்கவைக்கப்பட்டது.


இது 10-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் முகலாயர் படையெடுப்பு நடைபெற்றது. வடக்கே நடந்த நிகழ்வுகளால் ராஜராஜனுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, படையெடுப்புகளில் அவர் ஈடுபட்டார். இலங்கையை வென்றார். அங்கு சோழர்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவரது மகன் இராஜேந்திரன் தந்தையைப் போலவே போர்க்குணம் மிக்கவன். தன் யானைகளை கப்பலில் எடுத்துச் சென்று தென் பர்மாவை வென்றான். வடஇந்தியா சென்று வங்காள மன்னனைத் தோற்கடித்தான். குப்தர்களுக்குப்பின் இக்காலகட்டத்தில் சோழராட்சி விரிவடைய ஆரம்பித்தது.


ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. தான் வென்ற நாடுகளைத் தக்க வைக்கும் முயற்சியில் இராஜேந்திரன் ஈடுபடவில்லை. கி.பி. 1013 முதல் 1044 வரை அவன் அரசாட்சி செய்தான். அவனது மரணத்திற்குப்பின் சோழராட்சி சரிய ஆரம்பித்தது.



சோழர்கள் போர் வெற்றிகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்லர். கடல் வணிகத்திலும் பெயர் பெற்றவர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகப் பொருள்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது. கடல் வழியாக வெகுதூரம் வரை வணிகப் பொருள்கள் அனுப்பப்பட்டன. யவனர்கள் அல்லது கிரேக்கர்களின் குடியிருப்பு அங்கு இருந்தது.



இதே கடிதத்தில் தொடர்ந்து இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு செய்தி கூறிவிட்டு மறுபடியும் சோழர்களைப் பற்றி எழுதுகிறார். மகளுக்கு அவர் எழுதும் குறிப்பு வாசகரையும் தெளிவுப்படுத்துகிறது.



""பல நூற்றாண்டு கால தென்னிந்திய வரலாற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்ல முயன்றுள்ளேன். என் இந்த முயற்சி உனக்குச் சிறிய குழப்பத்தைக்கூட உண்டாக்கலாம். அப்போது பல மன்னர்களைப் பற்றியும், வம்சங்களைப் பற்றியும் அறிய எண்ணும்போது குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது.



மன்னர்களையும் அவர்களுடைய வெற்றியையும்விட மிகவும் முக்கியமானது அந்நாளைய பண்பாடு மற்றும் கலை தொடர்பான பதிவே. கலையியல் நோக்கில் எடுத்துக் கொண்டால் அதில் வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவின் பங்களிப்பே அதிகம். வடஇந்தியாவில் பெரும்பாலான மரபுச் சின்னங்களும், கவின்மிகு கட்டடங்களும், சிற்பங்களும் போரின் காரணமாகவும், முகலாயர்களின் படையெடுப்புகளாலும் அதிக பாதிப்புக்குள்ளாயின.



இக்காலகட்டத்தில் சோழமன்னன் இராஜராஜனால் ஓர் அழகான கோயில் தஞ்சாவூரில் கட்டப்பட்டது. பாதமியிலும், காஞ்சிபுரத்திலும் கூட அழகான கோயில்கள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதி நிலை இதுவே. ராஜராஜன் காலத்தில் அழகான செப்புத்திருமேனிகளும் காணப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது நடராஜர் சிற்பமே.



கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் பல நீர்ப்பாசன வசதிகளைச் செய்தான். அவற்றுள் முக்கியமானது 16 மைல் நீளமுள்ள நீர்த்தேக்கமாகும். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குபின் அங்கு வந்த அரேபியப் பயணி அல்பெரூனி அதைக் கண்டு வியக்கிறார். தம் மக்கள் அதைக் கண்டால் வியந்து போவார்கள்'' என்றும் கூறி இதுபோன்ற கட்டுமானத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் புகழாரம் சூட்டுகிறார்.



அங்கோர்வாட் (கம்போடியா) மற்றும் ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) என்னும் தலைப்பில் அமைந்த 17.5.1932-ம் நாளிட்ட கடிதத்தில் நேரு ஸ்ரீவிஜயத்துடன் சோழர்கள் கொண்ட தொடர்பு பற்றியும், தென்னிந்தியாவில் சோழப்பேரரசு 11-ம் நூற்றாண்டில் உச்சநிலையில் இருந்தபோது ஸ்ரீவிஜயமும் அத்தகு நிலையில் இருந்தது பற்றியும், இரு பேரரசுகளுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும் குறிப்பிடுகிறார்.



11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே போர் மூண்டது பற்றியும், அக்காலகட்டத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் கடற்பயணம் மேற்கொண்டு ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற முயன்றதையும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்ரீவிஜயம் மீண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.


சோழர்களைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையை தன் கடிதங்களில் நேரு குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அவர் உலக வரலாற்றில் சோழர்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.

மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன்: முதல்வர் மு. கருணாநிதி

மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன்: முதல்வர் மு. கருணாநிதி




First Published : 27 Sep 2010 12:44:29 AM IST



Last Updated : 27 Sep 2010 12:56:40 AM IST



தஞ்சாவூர் ஆயுதப் படை திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டையொட்டி, சிறப்பு நாணயத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதைப

தஞ்சாவூர், செப். 26: ஆயிரமாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன் எனப் புகழாரம் சூட்டினார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.



தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, ஆயுதப் படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியது:





சோழ மன்னர்களில் பெரும் சிறப்பும், பெரும் புகழும் கொண்டு விளங்கிய ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அதிகாரிகள், ஆர்வலர்கள், அறிஞர்களுடன் இணைந்து இங்கு கொண்டாடியிருக்கிறோம். இதன்மூலம் நாம் ராஜராஜனுக்கு புகழை சேர்த்ததாகக் கொள்ளக்கூடாது. ராஜராஜன்தான் நமக்கு இந்த வாய்ப்பை பிச்சையாக வழங்கியுள்ளார்.





நீலகண்ட சாஸ்திரிகள் கூட கலைப்படைப்பு மிகுந்திருந்த காலம் ராஜராஜனின் காலம் என்றும், அக்காலத்தில் மக்கள் மீது அக்கறை கொண்டு கலை, உள்ளூர் ஆட்சி முறை, வாணிபம், கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முழுமை பெற்று விளங்கின எனக் கூறியுள்ளார்.





கி.பி. 850-ல் விஜயாலய சோழன் இங்கிருந்த பகை மன்னனை வெற்றி கொண்டு, தஞ்சையை சோழர்களின் தலைமையிடமாக மாற்றினான். அடுத்து வந்த ஆதித்தன் தொடங்கி ராஜராஜன், ராஜேந்திரன் என சோழப் பேரரசின் தலைநகராக தஞ்சாவூர் விளங்கியது. இங்கிருந்து வங்கக் கடல், அரபிக் கடல், மாலத்தீவுகள் வரையிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, அதனைத் திறம்பட நிர்வகித்தான் ராஜராஜன்.





உதாரணமாக, எல்லைகளில் பாதுகாப்புக்கு காவல் படைகள், ஆற்றல் மிக்க அலுவலர்கள், அறிஞர்களை எப்போதுமே தன்னுடன் வைத்திருந்தான்.





ராஜராஜன் காலத்தில் பல்வேறு வரிகள் போடப்பட்டன. அவற்றை இரண்டாண்டுகளுக்குச் செலுத்தாதவர்களின் நிலங்களை விற்று, அந்தப் பணம் அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டது. அவன் திரட்டிய நிதிகள் மக்கள் நல்வாழ்வு, சுகம், நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வீரப்பணிகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டன.





ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க ஒரு முறை கையாளப்பட்டிருந்தது. இதற்கென பயன்படுத்தப்பட்ட ஒரு கோலுக்கு உலகளந்தான் கோல் என்று பெயர். நிலங்களை நிலம், கொல்லை, காடு எனப் பிரித்து, அக்காலத்திலேயே அளவீடுகள் செய்யப்பட்டன.





ராஜராஜன் சைவத்தைப் பின்பற்றுபவனாக இருந்தாலும், வைணவம், பௌத்தம், சமண சமயங்களை வெறுத்தவன் அல்லன். அவர்களுக்கும், அந்தணர்கள், புலவர்கள் உள்ளிட்டோருக்கும் நிலங்களை வழங்கியுள்ளான்.





ஊராட்சிகளை நிர்வகிக்க தனியாக அவை இருந்தன.



இவை வரி விதித்தல், வசூலித்தல், அதனை அரசு கஜானாவில் சேர்த்தல், வழக்குகளை விசாரித்துத் தீர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த அவைக்கு உறுப்பினராகப் போட்டியிடவே பல்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. குடவோலை முறையில் உள்ளாட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.





மக்களாட்சியைத் திறம்பட நடத்தி வாழ்ந்தவன் ராஜராஜன். அவனைக் கண்டு நடுங்கியவர்கள் உண்டு. ஆனால், அவன் அமைதியின் உருவமாக, ஆன்மிகவாதியாக வாழ்ந்தான்.





உலகமே வியக்கும் பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜனின் அடுத்த ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது நாம் இருக்கப்போவதுமில்லை. அந்த விழாவை நடத்துபவர்கள் நம்மை மறக்கப் போவதுமில்லை என்றார் கருணாநிதி.





விழாவுக்கு மாநில நிதியமைச்சர் க. அன்பழகன் தலைமை வகித்தார்.





செம்மை நெல்லுக்கு ராஜராஜன் பெயர்





செம்மை நெல்லுக்கு ""ராஜராஜன் 1,000'' எனப் பெயர் சூட்டுவதாக அறிவித்தார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.





தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:





ஒரு முறை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னிடம் வந்து, இந்த நெல் செம்மையாக விளைகிறது, இதற்கு என்ன பெயர் வைக்கலாம் எனக் கேட்டார். செம்மையாக விளைவதால், செம்மை நெல் என்றே பெயர் வைத்துக் கொள்ளுமாறு கூறி, அப்போது அதற்கு செம்மை நெல் எனப் பெயரிட்டேன்.





தற்போது தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, அக் கோயிலைக் கட்டிய ராஜராஜனின் பெயர் தினந்தோறும் மக்கள் மனதில் உணவு உண்ணும் போதெல்லாம் எண்ணி மகிழ்வுறும் வகையில் செம்மை நெல் (சாகுபடிக்கு) ராஜராஜன் 1,000 எனப் பெயரிடுகிறேன் என்றார் கருணாநிதி.

Monday, September 20, 2010

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள்: கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு


First Published : 17 Sep 2010 01:13:34 PM IST

Last Updated :

தஞ்சாவூர், செப் 16: தஞ்சாவூரில் நடைபெற உள்ள பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான விழா அழைப்பிதழ்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பெரிய கோயிலில் தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை நிகழ்ச்சி, மாலை 6.45 மணிக்கு திருநங்கை நர்த்தகி நடராஜ் நடனம், இரவு 7.30 மணிக்கு முனைவர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முதல் நாளிலேயே மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிவகங்கைப் பூங்கா, ராசராசன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கரந்தை ஆகிய இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதேபோல, செப்டம்பர் 23, 24-ம் தேதிகளிலும் அதே 5 இடங்களில், அதே நேரத்திற்கு சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 2-ம் நாளான செப்டம்பர் 23-ம் தேதி பெரிய கோயிலில் மாலை 5.30 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் கலை நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு டி.எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு நடனக் கலைஞர் ஜாகிர் உசேன் நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.


செப்டம்பர் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு அரண்மனை வளாகத்தில் சோழர்கால வரலாற்றை விளக்கும் கண்காட்சியை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். காலை 10.30 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகால்சோழன் அரங்கில், "இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தை தொடங்கிவைத்தும், சோழர்கால ஓவியங்கள் என்ற நூலை வெளியிட்டும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.

மாலை 5.30 மணிக்கு பெரிய கோயிலில் அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினரின் பறையாட்டம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், மாலை 6.45 மணிக்கு அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.


செப்டம்பர் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரிய கோயிலில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தலைமை வகிக்கிறார். முனைவர்கள் ஒளவை நடராசன், குடவாயில் பாலசுப்பிரமணியன், நடன காசிநாதன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் பேசுகின்றனர். மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி வரவேற்றுப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் நன்றி கூறுகிறார்.

மாலை 5.30 மணிக்கு பெரிய கோயிலில் திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசையும், அதைத் தொடர்ந்து திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. பின்னர், முனைவர் பத்மா சுப்பிரமணியன் குழுவினரின் 1000 நடனமணிகள் வழங்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பெரிய கோயிலில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு திலகர் திடலில் தி.க.ச. புகழேந்தி, தி.க.ச. கலைவாணன் குழுவினரின் ராசராச சோழன் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது.


செப்டம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு பெரிய கோயிலில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஆயுதப் படையினர் பயிற்சித் திடலில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல்வர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரையாற்றுகிறார். விழாவுக்கு தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தலைமை வகிக்கிறார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பெற்றுக் கொள்கிறார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ச.சு. பழநிமாணிக்கம் சிறப்பு நாணயத்தை வெளியிட, நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமி பெற்றுக் கொள்கிறார்.


தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசுகின்றனர். தலைமைச் செயலர் சு. மாலதி வரவேற்கிறார். சுற்றுலா- பண்பாட்டுத் துறை செயலர் வெ. இறையன்பு நன்றி கூறுகிறார்.

முதல்வர் கருணாநிதி பெரிய கோயிலுக்கு வருவாரா?

செப்டம்பர் 23-ம் தேதி இரவே முதல்வர் கருணாநிதி தஞ்சாவூருக்கு வந்துவிடுவதாக சென்னையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக போலீஸôர் கூறுகின்றனர். 24-ம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வரங்க நிகழ்ச்சி, 26-ம் தேதி ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ள நிறைவு விழா நிகழ்ச்சி ஆகியவற்றில் மட்டுமே முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். 25-ம் தேதி அவர் தஞ்சாவூரில் தங்கியிருந்தாலும், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படவில்லை.

பெரிய கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்பதாக அழைப்பிதழில் இல்லை. பெரிய கோயிலில் 25-ம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் கனிமொழி வரவேற்கிறார்.

1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பெரிய கோயிலில்தான் நடைபெறுகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது, யாரெல்லாம் பங்கேற்கின்றனர் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பெரிய கோயிலுக்கும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்குமான ராசி குறித்த கருத்துகளைத் தகர்க்கும் விதமாக, முதல்வர் பெரிய கோயிலுக்குள் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
thanks by dinamani First Published : 17 Sep 2010 01:13:34 PM IST

தஞ்சை பெரிய கோவில்: கலை

தஞ்சை பெரிய கோவில்: கலை, வரலாற்று களஞ்சியம்

தஞ்சை பெரிய கோவில்: கலை, வரலாற்று களஞ்சியம்
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010,23:39 IST


மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 21,2010,09:01 IST


தமிழக வரலாற்றில், பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் வரலாற்றில், மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் அவன்.அருள்மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற, பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.


""செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமானன் இராஜசர் வக்ஞன்,'' என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.ஐப்பசி மாதம் சதய நாளில் ராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், திருவிடந்தை, திருநந்திக்கரை, கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க, தானம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்!

தஞ்சைப் பெரிய கோவிலில் சதயத்திருவிழா, 12 நாட்கள் சிறப்பாக நடந்ததை, அக்கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நாட்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீரில் ஏலக்காய், செண்பக மொட்டுகள் போடப்பட்டு, மிகுந்த நறுமணத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது.ராஜராஜ சோழனால் பலத் திருக்கோவில்கள் கட்டப் பெற்றன. அவற்றில், தஞ்சைப் பெரிய கோவில் தலைச்சிறந்த, ஒப்பற்ற கோவிலாகத் திகழ்கிறது. கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.எனவே, இக்கோவிலை ஓர் ஒப்பற்ற கலை வரலாற்றுக் களஞ்சியம் எனக் கூறுவதில் மிகையில்லை!இக்கோவில், உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், சீரிய முறையில் போற்றிப் பராமரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்!பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்பட்டாலும், "இராஜராஜீச்சுரம்' என்றும், "ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில்' எனவும் கல்வெட்டுகளில் உள்ளதைக் காணலாம்.""பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்,'' என்று, இப்பெரும் கோவிலைக் கட்டியதை பெருமிதத்தோடு ராஜராஜன் கூறுகின்றான். அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில், "கற்றளி' என அழைக்கப்படுகிறது.

கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

இக்கோவிலின் கிழக்குப் பக்கத்தில், இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன. முதல் கோபுரம், "கேரளாந்தகன் திருவாயில்' என்றும்; இரண்டாவது கோபுரம், "ராஜராஜன் திருவாயில்' என்றும் பெயரிட்டு குறிப்பிடப்படுவது சிறப்பு.ராஜராஜன் திருவாயிலில், அடித்தளத்தில் சண்டீசர் கதை, கண்ணப்ப நாயனார் வரலாறு, காமதகனம், வள்ளித் திருமணம் போன்றவை தொடர் சிற்பங்களாகவும், மேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய துவாரபாலகர் சிற்பங்களும் நம் கருத்தை கவர்கின்றன. கோவிலின் திருச்சுற்றுமாளிகையில், 36 பரிவார கோவில்கள் காணப்படுவதும் சிறப்பாகும்.

இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, "சாந்தாரக் கட்டடக் கலை' அமைப்பு எனக் கூறுவர்.இத்திருச்சுற்றில் தெற்கில் அகோர சிவர், மேற்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்கப் பெற்று, சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தரும் அற்புத கோவில் இது!

கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.

இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, "கதலிகா கர்ணம்' என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், மூன்று சிற்பிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. 1.வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன், 2.குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், 3.இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இம்மூவரும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆவர். இக்கோவிலில், ராஜராஜசோழனின் 25வது ஆட்சி ஆண்டில், வழிபாடு துவங்கி விட்டதை அறிகிறோம்.

நாள்தோறும் அபிஷேகத்திற்கும், விளக்குகள் எரிப்பதற்கும், கோவில் பணிக்காக தளிச்சேரிப் பெண்கள் 400 பேர் நியமிக்கப்பட்டதையும், மெய்க்காவலர்கள் - பரிசாரகர்கள் நியமிக்கப்பட்டதையும், திருக்கோவிலில் பணியாற்றியவர்கள் பற்றியும், நடந்த திருவிழாக்கள் பற்றியும் கல்வெட்டுகள் விரிவாகக் கூறுகின்றன.கோவிலில் தேவாரம் பாடுவதற்கு 48 பேரும், அவர்களுடன் கொட்டி மத்தளமும் - உடுக்கையும் வாசிக்க இருவர் ஆக, 50 பேர் நியமிக்கப்பட்டனர் என்பதை அறியும் போது, ராஜராஜன் திருமுறைப் பாடல்களிடம் கொண்டிருந்த பக்தியும் - ஈடுபாட்டையும் நம்மால் அறிய முடிகிறது!இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தைக் குறிக்கும்போது, வடக்கில் ஈசானமூர்த்தி கோவில் வரை கல்லில் வெட்டி, அங்கு இடம் போதாமல் போக, ராஜராஜன் திருவாயிலின் இடப்பக்கம் கல்வெட்டு தொடர்ச்சி வெட்டப்பட்டுள்ளது என்ற விவரம் கல்வெட்டில் காணப்படுகிறது.

கோவிலுக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் முறையாக கல்வெட்டாகப் பதிவு செய்ய ராஜராஜன் கொண்டிருந்த ஈடுபாட்டை இதனால் அறிய முடிகிறது.ராஜராஜனும், அவனது தேவியர்களும், மகன் ராஜேந்திர சோழனும், அதிகாரிகளும் சேர்ந்து, 70க்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகளை கோவிலுக்கு செய்தளித்துள்ளனர்.அவ்வாறு அளிக்கப்பட்ட திருமேனியின் உயரம், உருவ அமைப்பு, உலோகம் போன்ற விவரங்களை, கல்வெட்டுகள் துல்லியமாகக் குறிப்பிடுவதால், தஞ்சைப் பெரிய கோவில் வார்ப்புக் கலைக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட பஞ்சதேகமூர்த்தி, தட்சிணமேருவிடங்கர், அர்த்தநாரீசுவரர், சண்டீசர் வரலாறு கூறும் திருமேனி போன்றவை வேறு எந்த கோவிலிலும் காண இயலாததாகும்.இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கும், வீதியுலா எழுந்தருளும் திருமேனிகளுக்கும், நகைகள் செய்து அளிக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் மற்றும் அதன் எடை போன்றவை கல்வெட்டுகளில் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது.

நகைகளின் பெயர்கள் - திருப்பட்டம், திருக்கைக்காறை, திருப்பட்டிகை, முத்துவளையல், திருமுடி, திருமாலை, மாணிக்கத்தாலி, நவரத்தின மோதிரம், ரத்னவளையல், ரத்னகடகம், பவழக்கடகம், திருவடி நிலை போன்ற, பல அணிகலன்களின் பெயர்கள் காணப்படுகின்றன.இக்கோவிலுக்கு அளிக்கப் பெற்ற முத்துக்களில் தான் எத்தனை வகை! வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்பொளம், பயிட்டம், அம்பு, சிவந்த நீர், குளிர்ந்த நீர் என்று பல்வகை முத்துக்கள் கல்வெட்டுகளில் கூறப்படுகின்றன.கோவில் வழிபாட்டிற்காக பல வகையான பாத்திரங்கள் பொன், வெள்ளியால் செய்து அளிக்கப்பட்டன.

அவைகளின் பெயர்கள்: மண்டை, கொண்டி, தட்டம், குடம், கிடாரம், ஒட்டுவட்டில், கலசம், கலசப்பானை, தாரைத்தாள்வட்டில், படிக்கம், குறுமடல், காளாஞ்சி, இறண்டிகை போன்ற பரிகலன்கள் செய்தளிக்கப்பட்டன.இவற்றின் எடை எவ்வளவு என்று, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கல்வெட்டு குறிப்பது மிகவும் சிறப்பானது.

சில பாத்திரங்களில், "சிவபாதசேகரன்,' "ஸ்ரீராஜராஜன்,' "பஞ்சவன்மாதேவி' என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததையும் நம்மால் அறிய முடிகிறது.தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும் தான் சோழர் கால ஓவியங்கள் காணப்படுவது சிறப்பாகும். மேலும், நாயக்கர் கால ஓவியங்களும், மராட்டியர் கால ஓவியங்களும் இக்கோவிலில் காணப்படுகின்றன.இத்திருக்கோவிலில், "உலக முழுவதுடைய நாயகி' எனப் பெயர் கொண்ட அருள் வழங்கும் அம்மன் கோவில் 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்ரமணியர் கோவில் தஞ்சை நாயக்க மன்னர்களின் கலைப் படைப்பாகும். திருச்சுற்றில் தென்மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும். எனவே, தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற ஓர் கலை - வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை!இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சைப் பெரிய கோவில் நிறுவப்பட்டு, 1,000 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை, தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இக்கோவிலைக் கண்டு மகிழ்வோம்! பெருமை கொள்வோம்! போற்றிப் பாதுகாப்போம்!

- கி.ஸ்ரீதரன்

Sunday, September 19, 2010

face book

விண்வெளியில் உங்களின் "முகம்' மிதக்க ஆசையா?

விண்வெளியில் உங்களின் "முகம்' மிதக்க ஆசையா?



விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.


விண்வெளி வீரர்கள் போல, விண்வெளியில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு "விண்வெளி சுற்றுலா' திட்டத்தை வெளிநாடுகளில், பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விண்வெளி சுற்றுலா திட்டம், வரும் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், சாமான்யர்கள் இச்சுற்றுலாவில் தற்போது பங்கேற்க முடியாது. காரணம், இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகமான கட்டணம் தான்.அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் விண்வெளிச் சுற்றுலாவிற்கு 90 லட்ச ரூபாய் கட்டணமாக அறிவித்துள்ளது. இதற்கு சம்மதித்து, கிட்டத்தட்ட 300 பேர் முன் பணம் கட்டியுள்ளனர்.


இந்நிலையில், விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது."பேஸ் இன் ஸ்பேஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும். இத்திட்டத்திற்காக, "பேஸ் இன் ஸ்பேஸ்' என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள், அதை இந்த இணையதளத்தில் "அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும்.

"பேஸ் இன் ஸ்பேஸ்' திட்டம் குறித்து, திட்ட மேலாளர் ஜான்ஷான்னான் கூறுகையில், "இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர் மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை பதிய வைக்கும்' என்றார்.


அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள், விண்வெளி சுற்றுலாவிற்கு ஏற்ற உடல்நிலை, வயது இல்லாதவர்கள், நாசாவின் இந்த "பேஸ் இன் பேஸ்' திட்டத்தின் மூலம் தங்களின் விண்வெளி சுற்றுலா குறித்த ஆவலை ஓரளவிற்கு பூர்த்தி செய்து கொள்ளலாம். நாசாவின் இத்திட்டத்திற்கு அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.


பொதுமக்களுக்கு இதுதான் முதல் முறை : விண்வெளியில் பெயர்களை மிதக்கவிடும் திட்டங்கள் சில ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1977ம் ஆண்டு, தொடக்க கல்வி மாணவர்களின் கையெழுத்துக்கள், "விண்வெளியில் மாணவர்களின் கையெழுத்து' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. "காசினி' விண்வெளி ஓடத்தின் மூலம், சனி கிரகத்தின் வெளிவட்ட பாதையிலும், "போனிக்ஸ் மார்ச் லேண்டர்' என்ற விண் ஓடத்தின் மூலம் செவ்வாய் கிரக வட்டப்பாதையிலும், மற்றொரு விண்கலம் மூலம் சந்திரனின் வெளிவட்ட பாதையிலும் இந்த கையெழுத்துக்கள் "டிவிடி' டிஸ்க்குகள் மூலம் மிதக்கவிடப்பட்டன.


இந்த வகையில் "வாயேஜர் 1' என்ற விண்கலம் மூலம், "போனோகிராப் ரிக்கார்டு' முறையில் பதிவு செய்யப்பட்ட முத்தம், தாயின் அன்பான அரவணைப்பு, பூமியில் எழும் பல்வேறு வகையான சத்தங்கள் அடங்கிய டிஸ்க் விண்வெளியில் பறக்கவிடப்பட்டது. ஆனால், நாசா அறிமுகப்படுத்தியுள்ள "பேஸ் இன் பேஸ்' என்ற திட்டம் தான், பொதுமக்களும் தங்கள் புகைப்படங்களை விண்ணில் மிதக்கவிடும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. விண்வெளி வரலாற்றில் இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://faceinspace.nasa.gov/ just click here and participate thanks by team dinamalar பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010,23:50 IST


மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 20,2010,01:20 IST